டாடா ஓபன் பேட்மின்டன் லக்‌ஷியா சென் சாம்பியன்

மும்பை: டாடா ஓபன் இந்தியா சர்வதேச சேலஞ்சர் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் லக்‌ஷியா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் உலக ஜீனியர் சாம்பியன் குன்லாவத் விதித்சர்னுடன் (தாய்லாந்து) நேற்று மோதிய லக்‌ஷியா சென் 21-15, 21-10 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இப்போட்டி  35 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

கடந்த மாதம் கனடாவில் நடந்த உலக ஜூனியர் தொடரின் பைனலில் குன்லாவத்திடம் அடைந்த தோல்விக்கு லக்‌ஷியா நேற்று பழிதீர்த்துக் கொண்டார்.மகளிர் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா 21-16, 21-13 என்ற நேர் செட்களில் சக வீராங்கனைவிருஷாலி கும்மாடிடை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: