மும்பை: டாடா ஓபன் இந்தியா சர்வதேச சேலஞ்சர் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் லக்ஷியா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிப் போட்டியில் உலக ஜீனியர் சாம்பியன் குன்லாவத் விதித்சர்னுடன் (தாய்லாந்து) நேற்று மோதிய லக்ஷியா சென் 21-15, 21-10 என்ற நேர் செட்களில் அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். இப்போட்டி 35 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.