2.0 படத்தை இணையதளத்தில் வெளியிட தமிழ் ராக்கர்சுக்கு தடை : சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 படத்தை தமிழ் ராக்கர்ஸ்  இணையதளங்களில் வெளியிட தடை விதித்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அதில், மிகப்பெரிய பட்ஜெட்டில்  தயாரிக்கப்பட்டுள்ள 2.0 படத்தை  முறைகேடாக 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். குறிப்பாக ‘’தமிழ் ராக்கர்ஸ்’’ இணையதளத்தில் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சுந்தர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இணைய தள முகவரியில் மாற்றம் செய்து படங்களை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் வெளியிடுவதாக மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, தமிழ் ராக்கர்ஸ்’’க்கு சொந்தமான  சுமார்  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இணையதளங்கள் உட்பட 12 ஆயிரத்து 567 இணையதளங்களில் 2.0 படத்தை வெளியிட தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: