ஸ்ரீநகர் : லஷ்கர் தீவிரவாதி நவீத் ஜாட் உட்பட 2 பேரை பாதுகாப்பு படை சுட்டுக் கொன்றது. ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட குத்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் நேற்று அந்த கிராமத்தில் தீவிர ேதடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வீடு ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அந்த வீட்டை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது, வீட்டிற்குள் இருந்த தீவிரவாதிகள், வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில், வீரர்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டு க்ெகால்லப்பட்டனர். அவர்களின் சடலங்களை வீரர்கள் கைப்பற்றினர்.