சத்துணவுத் திட்டத்தில் ரூ.2400 கோடி கையூட்டு முறைகேடு செய்தவர்களை கைது செய்ய கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: சத்துணவுத் திட்டத்தில் ரூ.2400 கோடி கையூட்டு பெற்ற அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக சத்துணவுத்திட்டத்தில் சுமார் 2400 கோடி ரூபாய் அளவிற்கு ஆளும் கட்சி அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் லஞ்சம் பெற்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. தமிழக குழந்தைகளின் பசிப்பிணியை போக்க, ஓரளவு நிவாரணம் அளிக்கும் இந்த மனிதநேயத் திட்டத்திலேயே பெரும் பணம் முறைகேடாக விளையாடியிருக்கிறது. தமிழக அரசு நிர்வாகத்தின் ஒவ்வொரு அசைவிலும் ஊழல் நீக்கமற நிறைந்திருப்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

தமிழக சத்துணவு திட்டத்தில் லஞ்சமாக பணம் பெற்றவர்களுக்கு வருமான வரித்துறை சம்மன்கள் அனுப்பியுள்ளது.  குட்கா ஊழல் போன்று சத்துணவுத் திட்டத்தில் நடந்துள்ள பல்லாயிரம் கோடி ஊழல் வெளிவந்துள்ளது. இதில் தொடர்புடையவர்கள் அனைவரையும் கைது செய்து குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும்.    அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட யார் இந்த ஊழலோடு தொடர்புடையவர்களாக இருந்தாலும் அவர்களை பதவி நீக்கம், பணிநீக்கம் செய்திட வேண்டும். இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: