மரக்காணம்: மரக்காணத்தில் கடல் சீற்றம் காரணமாக சுமார் 3,000 ஏக்கர் உப்பளம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மரக்காணத்தில் வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் தண்ணீரில் மூழ்கிய உப்பளங்கள் ஏரி போல் காட்சி அளிக்கிறது. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் 19 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.