டெல்லி: நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என சுஷ்மா சுவராஜ் முடிவெடுத்துள்ளதற்கு அவர் கணவர் சுவராஜ் கவுசல் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடல்நலம் கருதி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். இந்த முடிவுக்கு அவர் கணவர் சுவராஜ் கவுசல் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.