திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான வனத்துறை சார்பில் திருமலையில் அமைக்கப்பட்டுள்ள சந்தனமர தோட்டம் மற்றும் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டு வரும் `பசுமை வனம்’’ பணிகளை தலைமை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் நேற்று அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தான வனத்துறை சார்பில் 100 ஹெக்டரில் சந்தன மரம் வளர்க்கப்பட்டு வருகிறது. இதற்காக 2013ம் ஆண்டு மத்திய அரசு ரூ.76 லட்சம் நிதி வழங்கியது. தேவஸ்தான நிர்வாகமும் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.