ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் உடன்பாடு நவம்பர் 25-ல் கையெழுத்தாகும்: டொனால்டு டஸ்க்

ஐரோப்பியா: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்சிட் உடன்பாடு நவம்பர் 25 ஆம் நாள் கையொப்பமாகும் என ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்க் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியன் நாடுகளிடையே பாதுகாப்புத் துறை ரீதியமன ஒப்பந்தம் கடந்த திங்கட்கிழமை அன்று கையெழுத்திடப்பட்டது. ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த 23 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் இதில் கையெழுத்திட்டனர்.  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகும் நிலையில், அதற்குப் பிந்தைய உறவுகள் குறித்து மைக்கேல் பார்னியர் பிரிட்டனுடன் பேச்சு நடத்தினார். பேச்சுக்குப் பின் இது பற்றிய உடன்பாட்டு வரைவை ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு டஸ்கிடம் அளித்தார்.

அதன் பின் பேசிய டொனால்டு டஸ்க், நவம்பர் 25ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் அவசரக் கூட்டம் பிரசல்சில் நடைபெறும் எனத் தெரிவித்தார். அன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான உடன்படிக்கை கையொப்பமாகும் எனக் குறிப்பிட்டார். விலகிய பின் பிரிட்டனுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறவு பற்றியும் அந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என டொனால்டு டஸ்க் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: