கஜா புயலால் உயிரிழப்பு ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை: கஜா புயலால் உயிரிழப்பு ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னையில் பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பேரிடர் மையத்தை தொடங்கிவைத்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இவ்வாறு கூறியுள்ளார். மேலும், நாகையில் புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மணிக்கு 100 கீ.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: