காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே பள்ளத்தூரை சேர்ந்தவர் முனியாண்டி மகன் கார்த்திகேயன். இவர் இன்ஜினியரிங் முடித்துவிட்டு சிங்கப்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அதே கம்பெனியில் இந்தோனேசியாவை சேர்ந்த பெரிலிஸ் பணியாற்றுகிறார். இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இருவீட்டார் சம்மதத்துடன் நேற்று பள்ளத்தூரில் உள்ள மணமகன் இல்லத்தில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தமிழக பாரம்பரிய முறைப்படி தாலி கட்டி, அம்மி மிதித்து, மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதில் கார்த்திகேயனின் பெற்றோர், உறவினர்கள் கலந்து கொண்டனர்.