தமிழக-கர்நாடக எல்லையில் நக்சல் வேட்டை

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள வனப்பகுதிகளில் நக்சல் நடமாட்டம் உள்ளதா என போலீசார் கண்காணித்து வருகின்றனர். அப்போது மலைகிராமங்களில் புதிய நபர்கள் நடமாட்டம் உள்ளதா என்பதை தெரியப்படுத்தக் கோரி கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில் கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் நக்சல் ஒழிப்பு பிரிவு போலீசாரும், அதிரடிப்படை போலீசாரும் நேற்றுமுன்தினம்  ரோந்து சென்றனர். இப்பகுதியில் மாவோயிஸ்ட் மற்றும் நக்சல் நடமாட்டம் இல்லை எனவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரோந்துப்பணி மேற்கொண்டு வருவதாகவும் அக்குழுவினர் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: