தரங்கம்பாடி டேனீஷ் கோட்டையை இலவசமாக பார்வையிட அனுமதி

தரங்கம்பாடி: தமிழ்நாடு அரசு  தொல்லியல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் நாகை மாவட்டம் தரங்கம்பாடி டேனீஷ் கோட்டை  உள்ளிட்ட 6 மரபு சின்னங்களில் ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி முதல் ஒரு வார  காலத்திற்கு தொல்பொருள் பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது.

இதை  முன்னிட்டு  டேனீஷ் கோட்டையை கட்டணமின்றி பார்வையாளர்கள் ஒரு வாரம் இலவசமாக பார்வையிட  அரசு ஆணையிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு பலகை வைக்கவும்,  தினசரி பார்வையாளர்களின் எண்ணிக்கை விபரங்களை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி  வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி,  கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வினாடி, வினா நிகழ்ச்சி கட்டுரை,  ஓவியம், பேச்சு போட்டி நடத்திடவும் அரசு அறிவிப்பில் கேட்டுக்  கொள்ளப்பட்டுள்ளது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: