ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு டசால்ட் நிறுவன சிஇஓ மறுப்பு

மும்பை : டசால்ட் நிறுவனம் யாருடைய நிர்பந்தத்தினாலும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவில்லை என்று டசால்ட் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி எரிக் டிராபியர் செய்தியாளரிடம் தகவல் தெரிவித்துள்ளார். பிரதமரின் நிர்பந்தத்தின் பேரில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கூறிய ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை நாங்களேதான் தேர்வு செய்தோம் என்று கூறிய அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் டசால்ட் நிறுவனம் முதலீடு எதுவும் செய்யவில்லை என்றும்  ரபேல்போர் விமானத்தின் விலையை உயர்த்தி விற்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: