தனியார் பஸ் கம்பெனி அருகில் கடலூரில் குண்டு வெடித்தது போலீசார் தீவிர விசாரணை

கடலூர்: கடலூர் சொரக்கல்பட்டு பகுதியில் கோபாலகிருஷ்ணன்(48) என்பவருக்கு சொந்தமான  தனியார் பஸ் கம்பெனி உள்ளது. இவரது அண்ணன் விநாயகமுருகன்(50) என்பவருக்கு சொந்தமான காலிமனை அருகில் உள்ளது. அங்கு பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. காலிமனையில் மண்டியிருந்த புதர்களை  சரி செய்து, குப்பைகளை ஊழியர்கள் ஒதுக்கி வைத்திருந்தனர். நேற்று மாலை 5 மணிக்கு குப்பைக்கு தீ வைத்து கொளுத்தினர். அப்போது சுவரையொட்டி கிரிக்கெட் பந்து சைசில் துணி மற்றும் டேப்பால் சுற்றப்பட்டு ஒரு பொருள் கிடந்தது. அதனை எடுத்து பார்த்த ஊழியர்கள் ஏதோ செய்வினை மந்திரம் செய்து வீசப்பட்ட பொருளாக இருக்கலாம் என்று சந்தேகித்து எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தூக்கி போட்டனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அப்பொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அந்த இடத்தில் ஆழமான குழியும் உண்டானது. இதுதொடர்பாக பஸ் கம்பெனி மேனேஜர் செல்வகுமார்(55) கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தகவல் அறிந்ததும் தனிப்பிரிவு குற்ற புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர்  வரதராஜூலு, கியூ பிராஞ்ச் சப்-இன்ஸ்பெக்டர் ரசூல் மற்றும் உளவுத்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: