கடலூர்: கடலூர் சொரக்கல்பட்டு பகுதியில் கோபாலகிருஷ்ணன்(48) என்பவருக்கு சொந்தமான தனியார் பஸ் கம்பெனி உள்ளது. இவரது அண்ணன் விநாயகமுருகன்(50) என்பவருக்கு சொந்தமான காலிமனை அருகில் உள்ளது. அங்கு பஸ்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. காலிமனையில் மண்டியிருந்த புதர்களை சரி செய்து, குப்பைகளை ஊழியர்கள் ஒதுக்கி வைத்திருந்தனர். நேற்று மாலை 5 மணிக்கு குப்பைக்கு தீ வைத்து கொளுத்தினர். அப்போது சுவரையொட்டி கிரிக்கெட் பந்து சைசில் துணி மற்றும் டேப்பால் சுற்றப்பட்டு ஒரு பொருள் கிடந்தது. அதனை எடுத்து பார்த்த ஊழியர்கள் ஏதோ செய்வினை மந்திரம் செய்து வீசப்பட்ட பொருளாக இருக்கலாம் என்று சந்தேகித்து எரிந்து கொண்டிருந்த நெருப்பில் தூக்கி போட்டனர்.