கொழும்பு: இலங்கை சுதந்திர கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியில் ராஜபக்ச இணைந்துள்ளார். மகிந்த ராஜபக்சவுடன் முன்னாள் எம்.பி. 50 பேரும் இலங்கை பொதுஜன முன்னணி கட்சியில் இணைந்துள்ளனர். மைத்ரிபால சிறிசேன தலைமையிலான சுதந்திரக் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.