கடலூர்: கடலூர் மாவட்டம் வேப்பூரில் எஸ்.பி கண் எதிரே லஞ்சம் வாங்கிய காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் ரவிச்சந்திரன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் மினி லாரியை மறித்து லஞ்சம் பெற்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றியதோடு துறை ரீதியிலான விசாரணைக்கும் எஸ்.பி சரவணன் உத்தரவிட்டுள்ளார்.