விளையாட்டு போட்டியில் பதக்கம் ரயில்வே ஊழியர்களுக்குமேலாளர் வாழ்த்து

சென்னை: ரயில்வே ஊழியர்களுக்கிடையே நடந்த போட்டியில் தங்கம், வெண்கலம் பதக்கம் வென்றவர்களுக்கு தெற்கு ரயில்வே மேலாளர் வாழ்த்து தெரிவித்தார். ரயில்வே நிர்வாகம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி  வருகிறது. அதன்படி பி.டி.உஷா, கபில்தேவ் போன்ற வீரர்களை ரயில்வே நிர்வாகம் உருவாக்கியுள்ளது. ேமலும் தெற்கு ரயில்வேயில் 4 பத்மவிருதுகள், 29 அர்ஜூனா விருதுகள் மற்றும் 1 கேல் ரத்னா விருதுகள் பெற்றவர்கள்  பணிபுரிந்து வருகின்றனர். மேலும் ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டு, குறிப்பாக தெற்கு ரயில்வே கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளது.

இதேபோன்று, 51வது இந்தியன் ரயில்வே ஊழியர்களுக்கிடையே அக்டோபர் 2ம் தேதி முதல் 15ம் தேதி வரை மும்பையில் நடந்த போட்டிகளில் தெற்கு ரயில்வே சார்பில் கலந்து கொண்டு தங்கம் மற்றும் வெண்கல பதக்கம்  வென்ற ரபத் ஹபீப், திலீப்குமார், பீட்டர் பால், வாசிம் அகமது ஆகியோர் தனியாகவும், குழுவாகவும் கலந்து கொண்ட போட்டியில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் வென்றனர். இவர்கள் நேற்று தெற்கு ரயில்வே மேலாளர்  குல்ஷேஸ்தாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: