சென்னை: ரயில்வே ஊழியர்களுக்கிடையே நடந்த போட்டியில் தங்கம், வெண்கலம் பதக்கம் வென்றவர்களுக்கு தெற்கு ரயில்வே மேலாளர் வாழ்த்து தெரிவித்தார். ரயில்வே நிர்வாகம் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. அதன்படி பி.டி.உஷா, கபில்தேவ் போன்ற வீரர்களை ரயில்வே நிர்வாகம் உருவாக்கியுள்ளது. ேமலும் தெற்கு ரயில்வேயில் 4 பத்மவிருதுகள், 29 அர்ஜூனா விருதுகள் மற்றும் 1 கேல் ரத்னா விருதுகள் பெற்றவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் போட்டியில் ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டு, குறிப்பாக தெற்கு ரயில்வே கலந்து கொண்டு சாதனை படைத்துள்ளது.