மும்பை: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான எஞ்சிய 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர், பும்ரா சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா சுற்றுப் பயணம் வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. ஒரு நாள் தொடரில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றியும், இரண்டாவது ஒருநாள் போட்டி சமனிலும் முடிந்தது. சொந்த மண்ணில் இத்தனை ரன்கள் அடித்தும் வெற்றி பெற முடியவில்லை என இந்தியாவும், சிறப்பாக சேஸ் செய்ய வீரர்கள் பேட்டிங் செய்தும் வெற்றி பெற முடியவில்லை என விண்டீஸ் அணியினரும் ஏமாற்றத்தில் உள்ளனர். இந்நிலையில், முதல் 2 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.