மும்பை: ஆஸ்திரேலியா ஏ மகளிர் அணியுடனான 2வது டி20 போட்டியில், இந்தியா ஏ அணி 28 ரன் வித்தியாசத்தில் வென்று 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. மும்பை கிரிக்கெட் சங்கத்தின் பந்த்ரா குர்லா வளாக மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா ஏ அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன் குவித்தது. தொடக்க வீராங்கனை மித்தாலி ராஜ் 105 ரன் (61 பந்து, 18 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 57 ரன் (32 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினர். டி20ல் ஒரே இன்னிங்சில்அதிக ரன் எடுத்த இந்திய வீராங்கனைகள் பட்டியலில் ஸ்மிரிதி மந்தனா (102 ரன்) சாதனையை மித்தாலி முறியடித்தார்.