காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்த முயன்ற யமஹா, ராயல் என்பீல்ட் தொழிலாளிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். தொழிற் சங்கத்திற்கு அங்கீகாரம், பணி நிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி யமஹா மற்றும் ராயல் என்பீல்ட் நிறுவன தொழிலாளர்களும் கடந்த 40 நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர் போராட்டங்கள் நடத்தியும் அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை.