செங்கம் அருகே ஆசிரியர் கண்ணனை விடுவிக்கக் கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை : செங்கம் அருகே மேல்நாச்சிப்பட்டில் பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் கண்ணனை விடுவிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஆசிரியர் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யக் கூடாது என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.முன்னதாக செங்கம் அருகே பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி அரசு பள்ளி ஆசிரியர் கண்ணன் மீது பொதுமக்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.    

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: