இந்திய உளவு அமைப்பான RAW தொடர்பாக அமைச்சரவையில் எதுவும் பேசப்படவில்லை: இலங்கை அமைச்சர் விளக்கம்

கொழும்பு: இலங்கை அதிபர் சிறிசேனாவை கொல்ல சதி என்ற பொய் செய்தியை பரப்பிய அமைச்சர்கள் யார் என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்படும் என இலங்கை அமைச்சர் மஹிந்த சமரசிங்கே தெரிவித்துள்ளார். இந்தியா-இலங்கை இடையே விரிசல், மோதலை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல் வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்திய உளவு அமைப்பான RAW தொடர்பான எந்த விஷயமும் அமைச்சரவையில் பேசப்படவில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்கே தெரிவித்துள்ளார். அண்டை நாட்டுக்கே முதல் உரிமை என்ற இந்திய அரசின் முன்னுரிமை திட்டம் இலங்கை, இந்தியா இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த உதவி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: