குருகிராமில் பாதுகாவலரால் சுடப்பட்ட நீதிபதியின் மகன் மூளைச் சாவு

குருகிராம்: டெல்லியின் புறநகர் பகுதியில் உள்ள குருகிராமில் கூடுதல் அமர்வு நீதிபதியாக இருப்பவர் கிருஷண் காந்தி. இவரது பாதுகாப்புக்காக மஹிபால் சிங் என்ற போலீஸ்காரர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நீதிபதியின் மனைவி ரித்து (38) மற்றும் 18 வயது மகன் துருவ் ஆகியோர் காரில் மார்க்கெட்டிற்கு சென்றனர். உடன் வந்த பாதுகாவலர் மஹிபால் சிங், வழியில் திடீரென அவர்களை துப்பாக்கியால் சுட்டார். இதில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ரித்து இறந்தார். துருவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தபோதும் அவர் நேற்று மூளைச்சாவு அடைந்தார். கைதான மஹிபாலிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: