திருப்புவனம்: திருப்புவனம் அருகே கீழடியில் நான்காம் கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்ததை தொடர்ந்து ஆய்வுக்குழிகள் நேற்று மூடப்பட்டன.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி பள்ளிச்சந்தைபுதூரில் மத்திய தொல்லியல்துறை சார்பில் 3 கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன. ஏப். 18ம் தேதி முதல் நான்காம் கட்ட ஆய்வில் தமிழக தொல்லியல்துறையினர் ஈடுபட்டனர். இதில் 34 குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன. அப்போது 6 தங்க ஆபரணங்கள் உள்பட சுமார் 5,820 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.