ஜே.கே.டயர் தேசிய கார் பந்தயம் சென்னை வீரர் கார்த்திக் முன்னிலை

கோவை: தேசிய அளவிலான ஜே.கே.டயர் கார் பந்தயங்களின் மூன்றாவது சுற்று கார் பந்தயத்தின் யூரோ ஜே.கே.18 பிரிவில், சென்னை வீரர்  கார்த்திக் தரணி முதலிடம் பிடித்தார்.கோவை கரி மோட்டார் ஸ்பீட்வேயில்  நடைபெற்ற இந்த தொடரில் கார்த்திக் 15 நிமிடம், 37.117 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து அசத்தினார்.  ந்யன் சாட்டர்ஜி (15:38.043) 2வது இடமும், அஷ்வின் தத்தா (15:40.886) 3வது இடமும் பிடித்தனர்.நோவிஸ் கோப்பைகான போட்டியில் டி.டி.எஸ் ரேசிங் அணியை சேர்ந்த கோழிக்கோடு வீரர் ஹாசிம் முதல் இடத்தையும், மொமண்டம் மோட்டர் ஸ்போர்ட்ஸ்  பெங்களூரு வீரர் டிஜில் ராவ் இரண்டாம் இடத்தையும், எம்.ஸ்போர்ட் அணியை சேர்ந்த கோவை வீரர் சூர்ய வரதன் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.  

இரண்டாவதாக நடைபெற்ற எல்.ஜி.பி பார்முலா 4 கார் பந்தயத்தில் கோலாப்பூர் வீரர் சித்தேஷ் மண்டோடி, டார்க் டான் அணியை சேர்ந்த கோவை வீரர்  சரோஷ் ஹட்டாரியா, எம்.ஸ்போர்ட் அணியை சேர்ந்த பெங்களூரு வீரர் ஷோகில் ஷா முறையே முதல் 3 இடங்களை பிடித்தனர்.இத்தொடரில் 6 வீராங்கனைகள் உட்பட மொத்தம் 76 பேர் பங்கேற்றனர். போட்டிகளின் நடுவே 25 ஹார்லி டேவிட்சன் இரு சக்கர வாகனங்கள்  ஓட்டி வரப்பட்டதும், ஸ்டண்ட் ஷோவும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. தேசிய சாம்பியன்களை முடிவு செய்வதற்கான 4வது மற்றும்  இறுதிச்சுற்று போட்டிகள் நவம்பர் 16ம் தேதி முதல் 18 தேதி வரை டெல்லி, நொய்டாவில் உள்ள புத் சர்க்யூட்டில் நடைபெற உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: