நெல்லை: புஷ்கர விழாவில் பங்கேற்ற பெண், தாலி செயினை நீரில் தவறவிட்டார். போலீசார் உடனடியாக அதை மீட்டு அந்த பெண்ணிடம் ஒப்படைத்தனர்.தாமிரபரணி புஷ்கர விழா நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 11ம்தேதி தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. 5வது நாளான இன்று ஆந்திரா, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள், தாமிரபரணி தீர்த்த கட்டங்களில் புனிதநீராடி வருகின்றனர்.
இந்நிலையில் வேலூரை சேர்ந்த செல்வராஜ் மனைவி கலைவாணி(35) என்பவர் புஷ்கர விழாவில் பங்கேற்க நெல்லை வந்தார்.