சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே பண்ணை வீட்டில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி பினு மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பினு (50) என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன், மாங்காடு அருகே மலையம்பாக்கத்தில், தனது கூட்டாளிகள் மற்றும் ரவுடிகள் புடைசூழ, வீச்சரிவாளால் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடியது அதிர்வலையை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் வெளியானதும் ரவுடி பினு தப்பி தலைமறைவானான்.அதன் பிறகு என்கவுன்டருக்கு பயந்து அவனே ேபாலீசில் சரணடைந்தான். சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடி பினு, அதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். நீதிமன்ற உத்தரவின் பேரில், அவரை போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில், கும்மிடிப்பூண்டி அருகே பூவலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட தானிப்பூண்டி கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ரவுடி பினு கூட்டாளிகளுடன் பதுங்கியிருப்பதாக பாதிரிவேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் மாலை சம்பவ இடத்துக்கு சென்று, ரவுடி பினு மற்றும் கூட்டாளிகளை சுற்றி வளைத்தனர்.