பெய்ஜிங்: சீனாவில் நடைபெறும் டியான்ஜின் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா தகுதி பெற்றார்.அரை இறுதியில் சுவிஸ் வீராங்கனை டிமியா பாஸ்கின்ஸியுடன் நேற்று மோதிய பிளிஸ்கோவா அதிரடியாக விளையாடி 6-2, 6-1 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று பைனலுக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி நேரத்திலேயே முடிவுக்கு வந்தது.மற்றொரு அரை இறுதியில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா 6-3, 6-4 என்ற நேர் செட்களை சூ வெய் சையை (தைபே) வீழ்த்தினார். இன்று நடைபெறும் பைனலில் பிளிஸ்கோவா - கார்சியா மோதுகின்றனர். ஜோகோவிச் அபாரம்: ஷாங்காய் மாஸ்டர்ஸ் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் இளம் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவுடன் (ஜெர்மனி) நேற்று மோதிய நோவாக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6 -1 என்ற நேர் செட்களில் வென்று பைனலுக்கு தகுதி பெற்றார். 3