புவனேஸ்வர் : வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று உருவான ‘டிட்லி’ புயல் ஒடிசா- ஆந்திராஇடையே கரையை கடந்தது. இதன் விளைவாக ஒடிசாவில் புயல் காற்றுடன் கூடிய, கனமழை பெய்து வருகிறது. இதனால் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் சிகாகுளம் அருகே மிகப் பெரிய நிலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.