ஆசிய பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் வெண்கலம்

ஜகார்தா: ஆசிய பாராலிம்பிக் விளையாட்டு போட்டித் தொடரின் மகளிர் ஈட்டி எறிதலில் இந்திய வீராங்கனை தீபா வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த தொடரில் நேற்று களமிறங்கிய தீபா 10.15 மீட்டர் தூரம் எறிந்து புதிய ஆசிய சாதனையுடன் 3வது இடம் பிடித்தார். மகளிர் வீல்சேர் கிளப் த்ரோ பிரிவில் இந்தியாவின் ஏக்தா பியான் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார்.

மகளிர் 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ரக்ஷிதா ராஜு தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் மனிஷ் நர்வால் ஆசிய பாரா போட்டி சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார். இந்தியா இதுவரை 6 தங்கம், 9 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 26 பதக்கங்களை வென்று 9வது இடத்தில் உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: