மினி ஜெனரேட்டர் புகையால் மூச்சுத்திணறி தாய்,மகள் பலி

கரூர்,: கரூர் ராமானுஜம்நகர் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா(45). பழக்கடை வியாபாரி. இவரது மனைவி சுந்தரி(40). இவர்களுக்கு ராகவி(16) என்ற மகளும், ரஞ்சித்(15), ரகு(13) என்ற மகன்களும் உள்ளனர். இதில், ராகவி சென்னையில் உள்ள ஒரு பள்ளிவிடுதியில் தங்கி 11ம் வகுப்பு பயின்று வந்தார். ரஞ்சித், ரகு இருவரும் கரூரில் உள்ள அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். ராஜா வீட்டில் மின் மீட்டரில் பழுது காரணமாக மின்சாரம் நேற்று முன்தினம் இல்லை.இந்நிலையில், ராகவி நேற்று முன்தினம் இரவு சிறிய ஜெனரேட்டரை வாசலில் வைத்து மின்விசிறிக்கு இணைப்பு கொடுத்து  தாயும், மகளும் ஒரே அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். நேற்று காலை ராஜா வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் உட்புறம் சுந்தரியும், ராகவியும் இறந்த நிலையில் கிடந்தனர். விசாரணையில், ஜெனரேட்டர்ய புகையால் மூச்சு திணறி இருவரும் இறந்தது தெரியவந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: