சென்னை: உரிமையியல் நீதிபதி தேர்வுக்கான ரிசல்ட் 5 மாதம் 26 நாட்களில் வெளியிடப்பட்டு உள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு மாநில நீதிப்பணியில் 320 உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி முதல்நிலை எழுத்து தேர்வை நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 11 மற்றும் 12ம் தேதி முதன்மை எழுத்துத் தேர்வு நடந்தது. நேர்காணல் தேர்வு கடந்த மாதம் 27ம் தேதி முதல் கடந்த 5ம் தேதி வரை நடந்தது.