ராமநாதபுரம்: ராமநாதபுரம் இடைதாங்கி கண்மாயில் கரை அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் எடுத்தவர்கள் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட அதிக ஆழத்திற்கு பள்ளம் தோண்டி மணல் அள்ளிச் செல்வதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் சிக்கல் பகுதி ஆய்வாளர் முகமது நசீர் மணல் கொள்ளையர்களுடன் பணம் கேட்டு பேசுவதாக வெளியான ஆடியோ ஆதாரங்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இடைதாங்கி கண்மாயில் இரவு, பகலாக மணல் அள்ளப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இடைதாங்கி, பாப்பாக்குடி உள்ளிட்ட கிராமங்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், மேலும் அப்பகுதி விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைப்பதற்கும் இந்த இடைதாங்கி கண்மாய் பயன்பட்டு வருகின்றது. மேலும் அந்த மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சியின் காரணமாக தமிழக அரசின் குடிநீர் திட்டத்தின் கீழ் இந்த கண்மாய் தூர்வாரப்பட்டு கரையை பலப்படுத்த திட்டமிடப்பட்டது.