நாகை மாவட்டத்தில் ஒரே வாரத்தில் 2 விவசாயிகள் தற்கொலை: நீரின்றி பயிர்கள் வாடியதால் நிகழ்ந்த சோகம்

நாகை: நாகை மாவட்டம் அருகே உள்ள கிராமத்தில் கருகிய நிலையில் பயிரைக் கண்டு மனம் தாங்காமல் ஒரே வாரத்தில் 2 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தில் பெய்த பெருமழையால், காவிரியில் வழக்கத்தை விட இந்தாண்டு தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. எனினும் அந்நீரானது கடைமடை மாவட்டமான நாகைக்கு வரவில்லை என்ற சோகத்தில் அப்பகுதி விவசாயிகள் இருந்தனர். நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம், தலையாமழை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருக்கு வயது 49, இவர் அப்பகுதியில் ஆறு ஏக்கர் பரப்பளவு கொண்ட குத்தகை நிலத்தில் நேரடி முறையில் நெல் விதைப்பு செய்திருந்தார். வெண்ணாறு பிரிவு பாசன வாய்க்காலான வாழ வாய்க்கால் மூலம் காவிரி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், முக்கொம்பு அணையில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக தண்ணீர் வருவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதனால் தண்ணீர் இன்றி ராமமூர்த்தியின் வயல்கள் வறண்டு காணப்பட்டன. 30 நாள் சம்பா பயிர்கள் கருகியதைக் கண்டு மனமுடைந்த ராமமூர்த்தி, பூச்சிமருந்தை குடித்துள்ளார். இதனையடுத்து, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல் கடந்த 20-ம் தேதி சீர்காழியை அடுத்துள்ள ஆதமங்கலம் கிராமத்தில் கர்ணன் என்ற விவசாயி பயிர் கருகியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தார். ஒரே வாரத்தில், இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: