திருவனந்தபுரம்: கேரள உயர்நீதிமன்றத்தில் முன்னாள் பிஷப் பிராங்கோ ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பிராங்கோவின் மனு பிற்பகல் 1.45க்கு விசாரிக்கப்படுகிறது. கோட்டயம் நீதிமன்றத்தில் பிராங்கோவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதையடுத்து உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.