நாகை: நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் தலையாமலை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (49). விவசாயி. இவர் இரண்டரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தார். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருந்ததால் கூடுதலாக நிலம் குத்தகைக்கு பிடித்து, 6 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்தார். நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட நிலையில் 35 நாள் வயதுடைய பயிராக உள்ளது. இந்தநிலையில், கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. விதை முளைத்ததில் இருந்து கடந்த 30 நாட்களாக தண்ணீர் இல்லை, மழையும் இல்லை. இதனால் பயிர்கள் கருகியது. இதனை கண்டு ராமமூர்த்தி மனவேதனை அடைந்தார்.