தூத்துக்குடி: தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவுப்படி, ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான 3 பேர் கொண்ட வல்லுநர் குழு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஆய்வுக்கு பின்னர் பின்னர் வல்லுநர்குழு பொதுமக்களிடம் கருத்து கேட்க உள்ளது. முன்னதாக நேற்று மாலை தூத்துக்குடி வந்த வல்லுநர்குழு ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை கொட்டும் இடத்தில் ஆய்வு நடத்தியது குறிப்பிடத்தக்கது.