வேலூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க சென்னை வந்த வேலூர், கஸ்பாவை சேர்ந்த அதிமுக நிர்வாகி மோகன்(65) நெரிசலில் சிக்கி பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் உயிரிழந்த மோகன் குடும்பத்திற்கு ₹2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என திமுக தலைமை அறிவித்தது. அதன்படி, மோகன் குடும்பத்தினரை திமுக எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் ஆகியோர் சந்தித்து காசோலை வழங்கினர். அப்போது மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி உட்பட பலர் உடன் இருந்தனர்.