அதிமுக பிரமுகர் குடும்பத்துக்கு திமுக நிதி

வேலூர்: முன்னாள் முதல்வர் கருணாநிதி இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க சென்னை  வந்த வேலூர், கஸ்பாவை சேர்ந்த அதிமுக நிர்வாகி மோகன்(65) நெரிசலில் சிக்கி  பரிதாபமாக இறந்தார். இந்நிலையில் உயிரிழந்த மோகன் குடும்பத்திற்கு ₹2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என திமுக தலைமை அறிவித்தது. அதன்படி, மோகன் குடும்பத்தினரை திமுக எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் ஆகியோர் சந்தித்து காசோலை வழங்கினர். அப்போது மாவட்ட அவைத்தலைவர் முகமதுசகி உட்பட பலர் உடன் இருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: