அறுந்து கிடந்த வயரை மிதித்தபோது மின்சாரம் பாய்ந்து வியாபாரி சாவு

துரைப்பாக்கம்: சென்னை பெருங்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணன் (29). வீடு வீடாக சென்று பால் பாக்கெட் விற்பனை செய்து வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழுந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை  4 மணியளவில் பைக்கில் கந்தன்சாவடியில் பால் பாக்கெட்கள் போட்டுவிட்டு ராஜிவ்காந்தி சாலையில், கல்லுக்குட்டை பகுதிக்கு வந்தார். பைக்கை நிறுத்திவிட்டு ஒரு வீட்டுக்கு சரவணன் பால் போடுவதற்கு நடந்து சென்றார்.  

அப்போது, எதிர்பாராதவிதமாக அறுந்து கிடந்த மின்வயரை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து சரவணன் சம்பவ இடத்தில் பரிதாபமாக பலியானார். தகவலறிந்து பெருங்குடி மின் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து மின்  இணைப்பை துண்டித்தனர். துரைப்பாக்கம் போலீசார் வந்து அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: