மீண்டும் சிறை திரும்பினார் நவாஸ்

லாகூர்: பாகிஸ்தானில் ஊழல் புகாரில் அந்நாட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அடியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரத்தில் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் தொண்டை புற்றுநோய் காரணமாக லண்டனில் காலமானார். அவரது உடல் பாகிஸ்தான் கொண்டு வரப்பட்டது. அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட மூவருக்கும் கடந்த 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. பரோல் முடிந்ததை தொடர்ந்து, நேற்று மூவரும் மீண்டும் சிறையில் சரணடைந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: