சென்னை: கருணாநிதி மறைவுக்குப் பின்னர் முதல் முறையாக திமுக செயற்குழு அவசர கூட்டம் இன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத் தில் நடைபெறுகிறது.திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக செயற்குழு அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார்.திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரிய சாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., தலைமை நிலைய செயலாளர்கள், அணிகளின் செயலாளர்கள். சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.