அணைகளை காமராஜர் கட்டினார். சத்துணவு எம்ஜிஆர் ஆரம்பித்தார். கருணாநிதி என்ன செய்தார் என்று சிலர் போகிற போக்கில் விமர்சனம் செய்கின்றனர். அவர் செய்யாமல் விட்ட துறைதான் என்ன? என்று எதிர் கேள்வி கேட்கும் தொண்டர்கள், அவர் செய்ததை பட்டியலிடுகின்றனர்.
1.போக்குவரத்து துறை என்ற துறையை உருவாக்கினார்.
2. போக்குவரத்தை தேசியமயமாக்கினார்.3.மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தார்.
4. 1500 பேரை கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்து தந்தார்.5. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்து தந்தார்.6. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தார். 7. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தார்.8. பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தார்.9. கையால் இழுக்கும் ரிக்ஷாவை ஒழித்து இலவச சைக்கிள் ரிக்ஷா கொடுத்தார்.10. இலவச கான்கிரீட் வீடுகளை ஒடுக்கப்பட்டோருக்கு கொடுக்கும் திட்டம் வகுத்தார்.11. குடியிருப்புச்சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தார்.12. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தார்.13. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென துறை அமைத்தார். 14. அரசியலமைப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான அமைப்பை அமைத்தார். 15. அரசியலமைப்பில் பிசி- 31%, எஸ்சி - 18 % ஆக உயர்த்தினார். 16. பிளஸ்2 வரை இலவசக்கல்வி உருவாக்கினார். 17. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவித்தார். 18. நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தார். 19. முதல் விவசாயக்கல்லூரி (கோவை) உருவாக்கினார். 20. அரசு ஊழியர்கள் குடும்ப நல திட்டம் தந்தார்.21. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தார்.22. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தார். 23. கோவில்களில் குழந்தைகளுக்கான “கருணை இல்லம் “ தந்தார். 24. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தார். 25. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தார்.26. இரண்டாம் அலகு நிலக்கரி மின்உற்பத்தி நெய்வேலி கொண்டுவந்தார். 27. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடிக்கு கொண்டுவந்தார்.28. சிட்கோ உருவாக்கினார். 29. சிப்காட் உருவாக்கினார்.30. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபப்பட்டோரில் தமிழ் இஸ்லாமியர்கள் போல் சேர்த்தார்.31. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம்.32. மனு நீதி திட்டம்.33. பூம்புகார் கப்பல் நிறுவனம்.34. பசுமை புரட்சி திட்டம். 35. கொங்கு வேளாளர் இனத்தை பிற்படுத்தப்பட்டோரில் இணைத்தார்.36. மிக பிறப்படுத்தப்பட்டோரில் வன்னியர்,சீர் மரபினரை சேர்த்தார்.37. மிக பிற்படுத்தபப்பட்டோருக்கு 20% தனி இட ஒதுக்கீடு தந்தார்.38. தாழ்த்தப்பட்டோருக்கு18% தனி இட ஒதுக்கீடு தந்தார். 39. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தார்.40. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தார். 41. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி, இளங்கலை பட்டப்படிப்பு வரை தந்தார்.42. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தார்.43. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தார்.44. சொத்தில் பெண்ணுக்கு சம உரிமையை சட்டமாக்கினார்.45. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு, 46. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தார். 47. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம்.48. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம்49. நேரடி நெல் கொள்முதல் மையம்50. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம், 51. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் அமைத்தார்.52. கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம்53. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தார்.54. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் நிறுவினார். 55. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைக்கழகம் நிறுவினார்.56. டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ கல்லூரி நிறுவினார். 57. முதன் முதலில் காவிரி நீதிமன்றம் அமைக்க முற்பட்டார். 58. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தார்.59. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு,60. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது,61. மெட்ராஸ், சென்னையாக்கியது. 62. முதல் தடவையாக விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடம்.63. தொழிற்சாலைகளுக்கான வெளிப்படை கொள்கை64. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவி, 65. கான்கிரீட் சாலை அமைத்தது.66. தொழில்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு67. திருவள்ளுவருக்கு சிலை வைத்தது.68. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்றுத் தந்தது69. செம்மொழி மாநாடு நடத்தினார்.70. சத்துணவில் கொண்டைக்கடலை, வாழைப்பழம் சேர்த்து வழங்கினார்.71. பால் விலை, பேருந்து கட்டணம், மின்சார கட்டணம் உயர்த்தி மக்களை துன்புறுத்தாதவர்.72. விவசாயக்கடனை அறவே தள்ளுபடி செய்து, விவசாய மக்களை காத்தவர். (2006-2011 வரை ஐந்து ஆண்டுகளில் பட்டினிச்சாவு இல்லாத மாநிலம் தமிழகம்)73. நியாய விலைக் கடைகளில் மளிகைப் பொருட்கள்(வாசனைச் சாமான்கள், சோம்பு, சீரகம், மிளகு, பட்டை, கிராம்பு, வெந்தயம், பிரிஞ்சு இலை, முதற்கொண்டு) அனைத்தும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்தவர். விலைவாசி அதனால் தான் கட்டுக்குள் இருந்தது. 74. ஈழத் தமிழருக்காக இரு முறை ஆட்சியை துறந்தவர். இவ்வாறு கருணாநிதியின் சாதனைகளை வாட்ஸ் அப் மூலமாகவும், கோஷங்களாகவும் எழுப்பி வருகின்றனர் திமுக தொண்டர்கள்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!