மதுரை : புதிய வாடகை சட்டம் முறையாக அமலாகாததால், பழைய சட்டப்படி தாக்கலாகும் மனுக்களை விசாரணைக்கு ஏற்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது கட்டிடத்திலுள்ள வாடகைதாரர்களை தமிழ்நாடு கட்டிடம் (ஒப்பந்தம் மற்றும் வாடகை) சட்டம் 1960ன் படி வெளியேற்ற உத்தரவிடக் கோரி மாவட்ட முன்சீப் மற்றும் வாடகை தீர்ப்பாய அலுவலர் நீதிமன்றத்தில் மனு செய்தேன். ஆனால், தமிழ்நாடு நில உரிமையாளர் மற்றும் வாடகைதாரர் உரிமை மற்றும் ஒழுங்குமுறை சட்டம் 2017 ெகாண்டு வரப்பட்டுள்ளதால், பழைய சட்டத்தின்படி விசாரணைக்கு ஏற்க முடியாது எனக்கூறி மனுவை மாவட்ட முன்சீப் நிராகரித்தார். அந்த உத்தரவை ரத்து செய்து, என் மனுவை விசாரணைக்கு ஏற்க உத்தரவிட வேண்டும்,’’ என்று கூறியிருந்தார்.