சென்னை: சென்னை, இந்துஸ்தான் அறிவியல் தொழில்நுட்ப கல்லூரியில், லண்டன் ராயல் அகாடமிக் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி உதவியுடன் தானியங்கி மற்றும் அழிக்க முடியாத ரோபோக்கள் குறித்த சர்வதேச கருத்தரங்கம் நாளை மற்றும் நாளை மறுநாள் (19, 20 ஆகிய தேதிகளில்) நடக்க உள்ளது. இந்த கருத்தரங்கில் முன்னணி கல்வி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், அறிஞர்கள், மற்றும் ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டு தானியங்கி மற்றும் அழிக்க முடியாத ரோபோக்கள் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர்.