சென்னை: திறமையான கிராமப்புற இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பாரத் சூப்பர் லீக் கபடி போட்டித் தொடரில் வாய்ப்பளிக்கப்படும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவராமகிருஷ்ணன் தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் நேற்று அவர் கூறுகையில், ‘கபடி தமிழகத்தின் பாராம்பரிய விளையாட்டு. கிராமப்புறங்களில் பெருமளவில் விளையாடுகின்றனர். விளையாட்டில் மட்டுமின்றி உடல் உழைப்பு காரணமாக உறுதி மிக்கவர்களாகவும் இருக்கின்றனர். அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர ஏசியன் பெயின்ட்ஸ் நிறுவனம், ரிபப்ளிக் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழகத்தில் பாரத் சூப்பர் லீக் கபடி போட்டிகளை நடத்தி வருகின்றன.