இந்தோனேஷியா: இந்தோனேஷியாவில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான முதலைகள் அடித்துக் கொல்லப்பட்டுள்ளன. மேற்கு பப்புவா பகுதியில் ஆல்பர்ட் ஷியாகான் என்பவர் முதலைப் பண்ணை ஒன்றை நடத்தி வந்தார். இந்தப் பண்ணையில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் இரைபோடும் போது தவறி விழுந்ததால் அவரை முதலைகள் கடித்துக் கொன்றன. இதையறிந்த ஊர் மக்கள் ஆத்திரமடைந்து முதலைப் பண்ணைக்குள் புகுந்து சூறையாடினர்.