துபாய்: கிரிக்கெட் விளையாட்டின் நெறிமுறைக்குப் புறம்பாக நடந்துகொண்ட இலங்கை கிரிக்கெட் அணி கேப்டன் தினேஷ் சண்டிமால், பயிற்சியாளர் சந்திகா ஹதுரசிங்கா, மேலாளர் அசங்கா குருசின்ஹா ஆகியோருக்கு 4 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.வெஸ்ட் இண்டீசுடன் கடந்த மாதம் செயின்ட் லூசியாவில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில், இலங்கை வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக புகார் எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 3வது நாள் ஆட்டத்தில் பங்கேற்க வராமல் இலங்கை அணியினர் தாமதம் செய்தனர்.