உலக கோப்பை வில்வித்தை : தங்கம் வென்றார் தீபிகா

சால்ட் லேக் சிட்டி: உலக கோப்பை வில்வித்தை தொடரின் மகளிர் ரீகர்வ் பிரிவில், இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கப் பதக்கம் வென்றார்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் இந்த தொடரின் மகளிர் ரீகர்வ் பிரிவு பைனலில் ஜெர்மனியின் குரோப்பெனுடன் நேற்று மோதிய தீபிகா 7-3 என்ற கணக்கில் அபாரமாக வென்று முதலிடம் பிடித்தார். இதன் மூலமாக துருக்கியின் சாம்சன் நகரில் ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சர்க்யூட் பைனலுக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். 2011, 2012, 2013, 2015ல் நடந்த உலக கோப்பை தொடர்களின் பைனலில் 2வது இடம் பிடித்த தீபிகா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த நிலையில், தற்போது முதல் முறையாக தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: