சோழவரம் : சென்னையின் குடிநீர் தேவைக்காக திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான சோழவரம் ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு கடந்த பிப்ரவரி மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. வழக்கமாக நீர் அனுப்பும் கால்வாயில் தண்ணீர் செல்லும் மட்டத்தை விட ஏரியின் நிர்மட்டம் குறைந்ததால் கடந்த மே மாதம் 5-ம் தேதியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டது.