தன்சேரா : திரிபுராவை சேர்ந்த 9 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய சாமர்த்தியத்தால் ரயில் விபத்தை தடுத்துள்ளார். அவருடைய சேவையை பாராட்டி திரிபுரா மாநில சுகாதார துறை அமைச்சர் சுதிப் ராய் பர்மன் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து அளித்துள்ளார். பழங்குடியினத்தை சேர்ந்த சிறுமி சுமதி திரிபுராவின் தன்சேரா என்ற பகுதியில் வசித்து வருகிறார். மழை காரணமாக அந்த பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு இருந்தது. மண் சரிவு ஏற்பட்டதை அறியாத நிலையில் கடந்த 15ம் தேதி தரம் நகரில் இருந்து தன்சேரா வழியாக பயணிகள் ரயில் ஒன்று அகர்தலாவுக்கு சென்று கொண்டிருந்தது.